இம்சை பதிவுகள் 2006

ராமச்சந்திரன்உஷா அவர்கள் 2006இன் பிடித்த பதிவுகள் என்று பட்டியலிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து ஒரு சங்கிலித் தொடர் தொடங்கலாமே என்று இம்சை அரசனின் சபையினர் கருதுவதால், சபை கூடி தேர்ந்தெடுத்த இந்த வருட இம்சை பதிவுகள்:



பிடித்தப் போர்ப் பதிவர்:


பிடித்தப் காதல் பதிவர்:


பிடித்தப் புதிர்ப்போட்டியாளர்:


பிடித்தப் நகைச்சுவைப் பதிவர்:


பிடித்தப் கலாய்த்தல் பதிவர்:

பிடித்த கலாய்க்கப்பட்டவர்(MTV Bakhra):


இதே மாதிரி உங்களுக்குப் பிடித்த வகைகளில், உங்களுக்குப் பிடித்த பதிவர்களைப் பட்டியலிட்டு எல்லாரும் தொடர வேண்டும் என்று ஆசைப்படுகிறார் லகுடபாண்டி!

லகுடபாண்டி ஆலோசனைப்படி, இந்தச் சங்கிலியைத் தொடர


* நாமக்கல் சிபி,
* கைப்புள்ள,
* அருள் குமார்
* செந்தில்

இவர்களை எம் அரசவைப் பணிக்கிறது..

நம்பலாமா சர்வேசா!

சர்'வேசன் சர்வேயை நம்பலாமா ? என்று தற்காலிகமாக குழு அரசியலை மறந்து யாராவது ஒரு சர்வே எடுத்தால் நல்லது என்று அனானிகள் முன்னேற்ற கழகம் கருதுகிறது.



எனவே, அனானி முன்னேற்றக் கழகத்தின் ஆசையை முன்னிறுத்தி, லகுடபாண்டியின் உதவியுடன்... இதோ வந்துவிட்டான் இம்சை அரசன்!!!










Surveyசனை நம்பலாமா?










நடுநிலையான சர்வே, நம்பலாம்


ஒருசார்பான சர்வே


சர்வே எடுப்பதே வேஸ்ட்


எங்கள் இட்லிவடை எடுப்பதே ஒரிஜினல் அக்மார்க் நம்பிக்கையான சர்வே


அடப் போப்பா! வேற வேலையில்ல!


கள்ள வோட்டு போடலாம் வாய்யா.. சும்மா பேசிகிட்டு


Click above to vote





ஒரிஜினல் சர்வேக்கு செல்ல இங்கே

ஆனைக் கதை- by பொன்ஸ்(எழுத நினைத்தது)

பொன்ஸக்காவுக்கு பதில் நான் எழுதுகிறேனே என்று வியக்க வேண்டாம்.
அவர் நட்சத்திரமாக பொறுப்பு ஏற்ற திங்கள் கிழமை முதல் பார்த்து வருகிறேன். அவரின் வலைப்பூக்களில் விதவிதமான அலங்காரங்கள். என் அரண்மனையில் அவருக்கு டிஸைனர் வேலை கொடுக்கலாமா எனக்கேட்டு அமைச்சரவை கூட்டத்தினையும் கூட்டினேன். ஆனால்.. அவர் அழைத்து வரும் ஆனைகளுக்கு சாப்பாடு போட்டு கட்டுப்படியாகாது என்பதால், லகுட பாண்டி மறுத்துவிட்டான். அது போகட்டும். தலைப்பிற்கு வருகிறேன்.

பொன்ஸக்காவின் வலைப்பூ தலைப்புகளில் தினம் ஒரு ஆனை அலங்கரிக்கிறது. அது சொல்லும் கதையே தனி.


படம் -ஒன்று:-
இதோ இருக்கிறாளே இவள் பெயர் ஆண்டாள்! படுபயங்கர சுட்டிக்காரி! எல்லோரும் சொல்லிச் சொல்லி பார்த்தும் பள்ளிக்கு போக மாட்டேன் என்று அடம் பிடித்தவள்.



படம்- இரண்டு:-
அப்படி அடம் பிடித்தவளிடம் பாசமாக பேசி, அத்தை பார்வதி ஸ்வீட் பாக்ஸை கொடுத்தாள். அதை வாங்கி ருசி பார்த்த ஆள்டாளுக்கு பிடித்துப் போனது. பள்ளிக்கு போகிறேன். இன்னுமொரு பாக்ஸ் வேண்டும் எனக்கேட்க.., அத்தை சொன்னாள். முதலில் நீ பள்ளிக்கு போ, மாலையில் வரும் போது வாங்கித்தருகிறேன்.



படம்- மூன்று:-
அவ்வளவுதான் சைக்கிளில் ஏறிப் பறந்தாள் ஆண்டாள். பாடங்கள் நடத்தப்பட்டாலும் அவள் மனம் அத்தை தரும் ஸ்வீட் பாக்ஸ் பற்றியே இருந்தது. வீட்டு மணி அடிக்கும் சத்தம் கேட்டது.



படம்-நான்கு:-

சைக்கிளையும், பாடப்புத்தகங்களையும் பள்ளியிலே விட்டு விட்டு.. ஆடிக்கொண்டே கிளம்பினாள். வீடு நோக்கி...

$$$

அவ்வளவுதாங்க படம் சுட முடிஞ்சது. சுட்ட படத்துக்கு கதை சொல்லியாச்சு. இன்னிக்கு பறக்குற ஆனை படம் போட்டு இருக்காங்க..அதனால கதியில திருப்பம் எல்லம் இருக்கு! :-)) மத்த படங்களையும் பார்த்துட்டு(சேர்த்துட்டு) கதை தொடர்ச்சியைச் சொல்கிறேன்.

$$$$

முதுமலைக்காடு போக வேண்டுமென்று அடம் பிடித்த இளவரசனை (என் மைந்தன்) பொன்ஸ்பக்கங்கள் வலைப்பூவைப் பார்த்ததும் மகிழ்ந்து போனாள். அந்த எபக்ட் இங்கேயே கிடைத்து விட்ட மகிழ்ச்சி அவனுக்கு! அலைச்சல் குறைந்த மகிழ்ச்சி எனக்கு!!