தமிழ்த் திரட்டிகளிலிருந்து விலகுவது எப்படி?

புலிகேசி: லகுடபாண்டி, நாம் தமிழிணையம் பக்கம் வந்து வெகு நாளாகிவிட்டதே..

லகுடபாண்டி(மனதுக்குள்): ஆமாம், ராணியார் வெளியே துரத்தும் வரை அந்தப்புரத்திலேயே பழியாகக் கிடந்தால் இப்படித்தான் ஆகும்..

புலிகேசி(கவனியாமல்): திரட்டிகளில் இப்போதைய ட்ரெண்ட் என்ன?

லகுடபாண்டி: வெயில் காலமாதலால், வறட்டி தட்டுவது போல், நண்பர்கள் மாட்டிக் கொள்ளும் காலத்தில், ஏதேனும் ஒரு திரட்டியைத் திட்டிவிட்டு, வெளியேறுவது தான் இப்போதைய ட்ரெண்டு

புலிகேசி: அட, நன்றாக இருக்கிறதே.. யாரைத் திட்டுவது? மணம் வீசும் தமிழர்களையா? அல்லது குருவிக் கூட்டுக்காரர்களையா?

லகுடபாண்டி: அரசே, நீங்கள் குருவிக்கூடுக்காரர்களைத் திட்டவே வேண்டாம். ஒரே ஒரு பதிவு, ஆதிக்க சக்திகள், பிராமணீயம் என்று எழுதினாலே, அவர்களின் ஜனநாயக திரட்டியிலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் நீக்கிவிடுவார்கள். அவ்வளவு நல்லதொரு மக்களாட்சித் திரட்டி அவர்களுடையது.

புலிகேசி: அப்படியானால், நமது பதிவுகள் வேறு யாருக்கும் தெரியாமலே போய்விடுமே!

லகுடபாண்டி: ஆமாம். நீங்கள் திட்டினால் பதிவைத் தூக்குவது அவர்கள் ஆரம்பத்திலிருந்தே செய்துவருவது தான். இப்போது திட்டிவிட்டு வெளியே போவது என்பது மணம் வீசும் திரட்டிக்கான ட்ரெண்ட் தான்.

புலிகேசி: ஓ, இவர்கள் எவ்வளவு அடித்தாலும் தாங்கும் என் தம்பி போன்ற ரொம்ப நல்ல்ல்ல்லவர்களோ?

லகுடபாண்டி: ஆம் மன்னா.... திரட்டியை விட்டு வெளியேறுவதற்கு முதலடியாக, இவர்களைத் திட்ட வேண்டும். 'திரட்டி நிர்வாகிகளின் தமிழ் புரியவில்லை. தீவிரவாதிகளைப் பற்றிய செய்திகளை மற்றவர்களுக்குத் தருவதால், இவர்களும் தீவிரவாதிகள் ஆகிவிடுகிறார்கள். இவர்களைச் சார்ந்து இயங்கும் பூங்காவின் பெயர் எனக்குப் பிடிக்கவில்லை. அதற்கு இங்கா என்று பெயர் வைக்காவிட்டால் அது இந்திய இறையாண்மைக்கு எதிரானது' ... இப்படி ஏதாவது சொல்லித் திட்டலாம்..

புலிகேசி: எதையும் சரியாகப் புரிந்து கொள்ளாமலே எழுதிய காரணம் போல இருக்கிறதே?

லகுடபாண்டி: மன்னா, நீங்கள் புரிந்து கொள்ள முயற்சித்தால், உங்களுக்கு அறிவுக் கண் திறந்து விடும். அதன்பின் நீங்கள் யாரையும் வீணாக திட்ட முடியாதே! அதனால், அனாவசியமாக புரிந்து கொள்வது என்ற முயற்சிக்கே போகக் கூடாது. யாராவது உங்களிடம் வந்து "புரிந்து கொண்டு கேள்வி கேளேன்!" என்றால், அப்போது "ம்ஹும்.. அவர்கள் தமிழில் எழுதுகிறார்கள், எனக்குப் புரியவில்லை. இந்திய இறையாண்மைக்கு உரிய மொழியான இந்தியிலோ, எங்களவா பாஷையான ஸம்ஸ்கிருதத்திலோ எழுதினால் மட்டும் தான் எனக்குப் புரியும்.", "நான் அமெரிக்காவில் வாழ்வதால், உங்க தமிழ் புரியாது. தமிழ்த் திரட்டியா இருந்தாலும் நீங்க எல்லாருக்கும் புரியுற மாதிரி இங்கிலீஸில் எழுதுங்க.." என்று உதார் விடலாம்.

புலிகேசி: அட! ஆனாலும் அன்னைத் தமிழ் புரியவில்லை என்று சொல்ல, கொஞ்சம் அவமானமாகத் தான் இருக்கிறது..

லகுடபாண்டி: (மனதுக்குள்) இம்சை அரசனுக்கே அவமானமா இருக்கா! இவரே மான வெட்கம் பார்க்காம கரடியிடம் தோற்றுப் போனவர்! இவருக்கே அவமானம் என்றால், இப்போது பேசிக் கொண்டிருக்கிறவர்கள் எல்லாம் எப்படித் தான் யோசிக்காமலேயே தமிழ் புரியவில்லை என்கிறார்களோ..

புலிகேசி: ஏய், என்ன முணுமுணுப்பு.. நாம் மட்டும் இப்படித் திட்டினால், நம்மை அடுத்தவர்கள் தவறாக நினைக்க மாட்டார்களா?

லகுடபாண்டி: ஒன்றுமில்லை மன்னா.. உங்கள் மான உணர்வை எண்ணிப் புளகாங்கிதம் அடைந்து கொண்டிருந்தேன்.. என்ன கேட்டீர்கள்? நாம் மட்டும் திட்டினாலா? இன்றைய ட்ரெண்டே இப்படித் திட்டுவது தானே.. அதான் வருகிறவன் போகிறவன் எல்லாம் கேள்விப்பட்டதை, கேள்விப்படாததை என்று எல்லாம் சொல்லித் திட்டிக் கொண்டிருக்கிறார்களே.. அந்தச் சுட்டிகளை எல்லாம் எடுத்துக் கொடுத்து, ஏற்கனவே பதில் வந்துவிட்ட அதில் உள்ள கேள்விகளுக்கு இன்னும் யாரும் பதில் சொல்லவில்லை என்று சத்தம் போட வேண்டும்.. அவ்வளவு தான்.. உங்கள் மதிப்பு ரொம்பவும் உயர்ந்துவிடும்..

புலிகேசி: அப்புறம்?

லகுடபாண்டி: தமிழ்மணம் உங்களுக்கு பட்டி என்று ஒன்று கொடுத்திருக்கும். அதை எடுத்துவிடுவதாகச் சொல்லி எடுத்து விடவேண்டும்.

புலிகேசி: எப்படி எடுக்கவேண்டும்?

லகுடபாண்டி: உங்கள் பதிவின் டெம்ப்ளேட் உரலில் உள்ள,

<!--thamizmanam.com toolbar code Part 1, starts. Pathivu toolbar (c)2005 thamizmanam.com -->
<script language="javascript" src="http://services.thamizmanam.com/jscript.php" type="text/javascript">
</script>
<!-- thamizmanam.com toolbar code Part 1, ends. Pathivu toolbar (c)2005 thamizmanam.com -->

என்ற பகுதியையும்,

<!-- thamizmanam.com toolbar code Part 2 for Blogger Beta, starts. Pathivu toorlbar v1.1 (c)2005 thamizmanam.com -->
<b:if cond="'data:blog.pageType">
<script language="javascript" src="'" type="text/javascript" photo="" blogurl=" + data:blog.homepageUrl + " cmt=" + data:post.numComments + " posturl=" + data:post.url + " date=" + data:post.timestamp + ">
</script>
</b:if>
<!-- thamizmanam.com toolbar code Part 2 for Blogger Beta, ends. Pathivu toolbar v1.1 (c)2005 thamizmanam.com -->

என்ற பகுதியையும், நீக்கிவிட வேண்டும். ரொம்ப கஷ்டப்பட வேண்டாம், "thamizmanam" என்றே தேடினாலே கிடைக்கும். இதைச் செய்வதன் மூலம் உங்களின் புதிய பின்னூட்டங்கள் தமிழ்மணத்தில் தெரியாது.

புலிகேசி: ஆனால், புதுப் பதிவிட்டால், வேறு யாராவது கூட அந்த உரலைத் தமிழ்மணத்தில் சேர்த்துவிட முடியுமே!

லகுடபாண்டி: அங்கே தான் இருக்கிறது விசயம். அதாவது, நீங்கள் வெளியேறி விட்டீர்கள், ஆனா உங்கள் பதிவு ஏன் திரட்டப்படுகிறதென்பது உங்களுக்கே தெரியாது.. எப்படி? ரொம்பவும் சுலபம் இல்லையா?

புலிகேசி: அடப்பாவி! வேறென்ன செய்தால் உண்மையில் வெளியேற முடியும்?

லகுடபாண்டி: தமிழ்மண நிர்வாகிகளுக்கு postadmin@thamizmaNam.com, admin@thamizmaNam.com போன்ற ஐடிகளுக்கு மடல் அனுப்பி தன்னை தமிழ்மணத்திலிருந்து நீக்குமாறு கேட்கலாம். அவ்வாறு கேட்டால் அவர்கள் தங்கள் தகவல்திரட்டிலிருந்து நீக்கி விடுவார்கள். அப்புறம் மீண்டும் பதிந்து கொண்டு தான் வர வேண்டும்.

புலிகேசி: அப்படிக் கேட்காமல் இவர்கள் எப்படி வெளியேறியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள் லகுடபாண்டி?

லகுடபாண்டி: சும்மா உங்கள் பதிவில் ஒரு இடுகை போட்டு, "என்னை நீக்குங்கள், நீக்குங்கள்...(ஏற்கனவே தாமாக விலகியவர்களின் பதிவுகளைச் சுட்டிக் காட்டி) இவர்களை எல்லாம் நீக்கியது போல் என்னையும் நீக்குங்கள். 24 மணிநேரத்துக்குள் நீக்குங்கள், அல்லது 48 மணிநேரத்துக்குள் நீக்குங்கள், குறைந்த பட்சம் 365 நாட்களுக்குள்ளாவது நீக்குங்கள்" என்று உதார் விடலாம். அப்புறம் நீங்கள் தமிழ்மணத்தில் இல்லை என்றே மக்கள் நினைத்துக் கொள்வார்கள்.

புலிகேசி: அட, இது இன்னும் அழகான யோசனையாக இருக்கிறதே!

லகுடபாண்டி: என்ன மன்னா? தமிழ்மணத்திலிருந்து விலகுவதாக நாமும் ஒரு பதிவு போட்டுவிடுவோமா?

புலிகேசி(யோசித்துக் கொண்டே): அடேய்! என்னை ஏற்கனவே மகாராணி அந்தப்புரத்திலிருந்து விரட்டிவிட்டார்.. திரட்டியிலிருந்தும் விரட்டிவிட்டால் நான் எங்கே போவேன்.. அடேய், யாரங்கே, இந்த லகுடபாண்டியைப் பிடித்து தலைகீழாகத் தொங்கவிட்டு...

(மன்னர் திரும்பவதற்குள் லகுடபாண்டி ஓடித் தப்பிக்கிறார்..)

சுடரும் சுடர்சார்ந்த சிந்தனையும்

புலிகேசி: திடீரென்று அரண்மனையில் யாரடா இத்தனை வெளிச்சமாக்கியது? மன்னன் அயர்ந்து சிந்தித்துக் கொண்டிருப்பது தெரியவில்லை?

லகுடபாண்டி: இல்லை மன்னா, நீங்கள் தூங்குவதற்கு..(புலிகேசி உறுமுகிறார்) ம்ம்.. வந்து, நீங்கள் சிந்தித்துக் கொண்டிருப்பது தெரிந்து தான் எல்லா விளக்கையும் அணைத்து வைத்திருந்தோம். எங்கிருந்தோ ஒரு காலில்லா உருவம் ஒரு விளக்கை எடுத்துக் கொண்டு வந்துவிட்டது..

புலிகேசி: ஏ, காலறுந்த கரடியே! எங்கிருந்து வந்தாய்? என்ன வேண்டும் உனக்கு?

ஆன்லைன் ஆவிகள் கேள்விச்சுடரோடு பிரகாசிக்கின்றன:
1. யாரடா அங்கே என்று கூச்சலிட்டால் அந்தப்புறத்தில் மட்டும் அத்தனை பேர் வந்து குவியும் ரகசியம் என்ன?


[மன்னர் லகுடபாண்டியின் காதில் ஏதோ குசுகுசுக்கிறார்: விவகாரமான கேள்வியாய் இருக்கிறது. நீரே பதில் சொல்லும்.]
லகுடபாண்டி: பெண்கள் நாட்டின் கண்கள். கண்களைப் பாதுகாக்கக் காவலர்கள் தேவை. அதனால் தான் எங்கள் அந்தப்புரங்களில் அதிக காவலர்களை வைத்திருக்கிறோம்!

புலிகேசி: ம்ஹும்.. வேறு இடங்களைக் காவல் காக்கச் சொன்னால் ஒரு பயல் இருக்க மாட்டேனென்கிறான்! பேசாமல் ஆவிகளைக் காவலுக்கு அமர்த்திக் கொள்ள வேண்டியது தான்.

2."ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட " என்று தொடங்கும் வாயிற்காப்போனின் வாழ்த்துப் பாவை நீங்களே ஒரு முறை முழுமையாகச் சொல்லுங்கள். பார்க்கலாம்!

புலிகேசி: லகுடபாண்டி, என்ன வார்த்தை சொன்னான், எங்கு சொன்னான், யாவர் முன்னே! இந்த அதிகப் பிரசங்கி ஆவியைத் தலைகீழாகத் தொங்கவிட்டு, ஓணாண்டி தண்டனையைக் கொடும்!

லகுடபாண்டி: மன்னா, இந்த ஆவி எப்போதுமே தலைகீழாய்த் தொங்குபவன் தான்.

புலிகேசி: ம்ம்ம்.. அப்படியானால், நேரடியாகத் தொங்கவிட்டு மிளகாயை வாலில் தடவுங்கள்!

3.அழகான மீசையை எப்படிப் பராமரிக்கிறீர்கள்?

புலிகேசி:(மீசையைத் தடவிக் கொண்டே): மகிழ்ந்தோம். ஓணாண்டி தண்டனை வேண்டாம். பிழைத்துப் போகட்டும்..
தினசரி குளிக்கும் போது ராணிமார்கள் இருபுறமும் பிடித்து நீவி விட, கொஞ்சம் வாசனைத் திரவியங்களும், சியக்காய் முதலான பல்வேறு மூலிகைத் தைலங்களும் சேர்த்த தண்ணீரில் மீசையை மட்டும் தனியே முழுக்காட்டி அதன் நுனியில் அழகான மல்லிகைகளைச் சூட்டி அவற்றினைப் பராமரித்து வருகிறேன்.

லகுடபாண்டி: மன்னா, வெள்ளை முடி தெரியாதிருக்க, கருப்பு நிற மையையும் பூசுவீர்களே, மறந்துவிட்டதா?

(புலிகேசி முறைக்கிறார்!)

4.சுடர் ஏற்றும் இவ்வேளையில் நாட்டு மக்களுக்கு என்ன செய்தி சொல்ல விழைகிறீர்கள்?

புலிகேசி: நாட்டு மக்கள் எல்லாரும் மறக்காமல் சாதிச் சண்டை மைதானங்களுக்கு அடிக்கடி சென்று வாருங்கள். அவ்வப்போது ஏதேனும் சண்டை போடுங்கள். முடிந்தால், என் பதிவில் ஒரு முறை சொல்லிவிட்டுப் போனால், நானும் வந்து சண்டை வேடிக்கை பார்ப்பேன்.

லகுடபாண்டி, அவ்வளவு தானே? முடிந்துவிட்டதா? மீண்டும் நான் சிந்தனையில் இறங்கலாமா?

லகுடபாண்டி: இன்னும் ஒரு வேலை இருக்கிறது மன்னா, நீங்களும் யாரையாவது பார்த்து நாக்கைப் பிடுங்கிக் கொள்வது போல் நாலு கேள்வி கேட்டுவிட்டுத் தூங்க.. ச்ச.. சிந்திக்கப் போக வேண்டும்.

புலிகேசி: நாக்கைப் பிடுங்கிக் கொள்வது போலவா? அப்படியானால், நம் கொசுபுடுங்கியைத் தான் கேட்க வேண்டும்.

கொசுபுடுங்கி, இந்தக் கேள்விச் சுடர்களை ஏற்றக் கூடாதா:

1. கொசு புடுங்கி என்ற பெயர் இலக்கணப்படி பிழை இல்லையா? கொசுவை அடிப்பார்கள்.. பிடுங்குவதா?

2. டார்ட்டாய்ஸ், மார்ட்டீன் போன்ற நிறுவனங்களுடன் உங்களுக்குத் தொழில்முறையில் தொடர்புண்டா?

3. பிற பதிவுகளிலிருந்து கொசு பிடுங்கும் போது, அந்தப் பதிவுகளின் சுட்டியைத் தருவது தானே மரியாதை. அதை ஏன் செய்ய மறுக்கிறீர்கள்?

4. நீங்களும் ஒரு போலிப் பதிவர் என்கிறார்களே. அது பற்றி உங்கள் கருத்து?

5. கொசு என்று தலைப்பு வைத்துக் கொண்டு ஏன் உங்கள் பக்கத்தில் கரடிகளை அலைய விட்டிருக்கிறீர்கள்

சோலியப் பாருங்கடே!

அந்நியன் :ஒரு நாளைக்கு அஞ்சு பின்னூட்டம் போட்டா தப்பா?
மென்பொருள் பொறியாளர் :தப்பு ஒண்ணும் இல்லீங்க!

அந்நியன் :
ஐநூறு பேர் அஞ்சு பின்னூட்டம் போட்டா தப்பா?

மென்பொருள் பொறியாளர் :
தப்பு மாதிரி தாங்க தெரியுது!

அந்நியன் :
ஐநூறு பேர் ஐநூறு பதிவுல அஞ்சு பின்னூட்டம் போட்டா தப்பா?

மென்பொருள் பொறியாளர் :
பெரிய தப்பு தாங்க!

அந்நியன் :

அதெ தாண்டா நீங்க எல்லாம் பண்ணிகிட்டிருக்கீங்க!
வெட்டிப்பசங்களா, போய் சோலியப் பாருங்கடா!!