இம்சை பதிவுகள் 2006

ராமச்சந்திரன்உஷா அவர்கள் 2006இன் பிடித்த பதிவுகள் என்று பட்டியலிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து ஒரு சங்கிலித் தொடர் தொடங்கலாமே என்று இம்சை அரசனின் சபையினர் கருதுவதால், சபை கூடி தேர்ந்தெடுத்த இந்த வருட இம்சை பதிவுகள்:



பிடித்தப் போர்ப் பதிவர்:


பிடித்தப் காதல் பதிவர்:


பிடித்தப் புதிர்ப்போட்டியாளர்:


பிடித்தப் நகைச்சுவைப் பதிவர்:


பிடித்தப் கலாய்த்தல் பதிவர்:

பிடித்த கலாய்க்கப்பட்டவர்(MTV Bakhra):


இதே மாதிரி உங்களுக்குப் பிடித்த வகைகளில், உங்களுக்குப் பிடித்த பதிவர்களைப் பட்டியலிட்டு எல்லாரும் தொடர வேண்டும் என்று ஆசைப்படுகிறார் லகுடபாண்டி!

லகுடபாண்டி ஆலோசனைப்படி, இந்தச் சங்கிலியைத் தொடர


* நாமக்கல் சிபி,
* கைப்புள்ள,
* அருள் குமார்
* செந்தில்

இவர்களை எம் அரசவைப் பணிக்கிறது..

நம்பலாமா சர்வேசா!

சர்'வேசன் சர்வேயை நம்பலாமா ? என்று தற்காலிகமாக குழு அரசியலை மறந்து யாராவது ஒரு சர்வே எடுத்தால் நல்லது என்று அனானிகள் முன்னேற்ற கழகம் கருதுகிறது.



எனவே, அனானி முன்னேற்றக் கழகத்தின் ஆசையை முன்னிறுத்தி, லகுடபாண்டியின் உதவியுடன்... இதோ வந்துவிட்டான் இம்சை அரசன்!!!










Surveyசனை நம்பலாமா?










நடுநிலையான சர்வே, நம்பலாம்


ஒருசார்பான சர்வே


சர்வே எடுப்பதே வேஸ்ட்


எங்கள் இட்லிவடை எடுப்பதே ஒரிஜினல் அக்மார்க் நம்பிக்கையான சர்வே


அடப் போப்பா! வேற வேலையில்ல!


கள்ள வோட்டு போடலாம் வாய்யா.. சும்மா பேசிகிட்டு


Click above to vote





ஒரிஜினல் சர்வேக்கு செல்ல இங்கே

ஆனைக் கதை- by பொன்ஸ்(எழுத நினைத்தது)

பொன்ஸக்காவுக்கு பதில் நான் எழுதுகிறேனே என்று வியக்க வேண்டாம்.
அவர் நட்சத்திரமாக பொறுப்பு ஏற்ற திங்கள் கிழமை முதல் பார்த்து வருகிறேன். அவரின் வலைப்பூக்களில் விதவிதமான அலங்காரங்கள். என் அரண்மனையில் அவருக்கு டிஸைனர் வேலை கொடுக்கலாமா எனக்கேட்டு அமைச்சரவை கூட்டத்தினையும் கூட்டினேன். ஆனால்.. அவர் அழைத்து வரும் ஆனைகளுக்கு சாப்பாடு போட்டு கட்டுப்படியாகாது என்பதால், லகுட பாண்டி மறுத்துவிட்டான். அது போகட்டும். தலைப்பிற்கு வருகிறேன்.

பொன்ஸக்காவின் வலைப்பூ தலைப்புகளில் தினம் ஒரு ஆனை அலங்கரிக்கிறது. அது சொல்லும் கதையே தனி.


படம் -ஒன்று:-
இதோ இருக்கிறாளே இவள் பெயர் ஆண்டாள்! படுபயங்கர சுட்டிக்காரி! எல்லோரும் சொல்லிச் சொல்லி பார்த்தும் பள்ளிக்கு போக மாட்டேன் என்று அடம் பிடித்தவள்.



படம்- இரண்டு:-
அப்படி அடம் பிடித்தவளிடம் பாசமாக பேசி, அத்தை பார்வதி ஸ்வீட் பாக்ஸை கொடுத்தாள். அதை வாங்கி ருசி பார்த்த ஆள்டாளுக்கு பிடித்துப் போனது. பள்ளிக்கு போகிறேன். இன்னுமொரு பாக்ஸ் வேண்டும் எனக்கேட்க.., அத்தை சொன்னாள். முதலில் நீ பள்ளிக்கு போ, மாலையில் வரும் போது வாங்கித்தருகிறேன்.



படம்- மூன்று:-
அவ்வளவுதான் சைக்கிளில் ஏறிப் பறந்தாள் ஆண்டாள். பாடங்கள் நடத்தப்பட்டாலும் அவள் மனம் அத்தை தரும் ஸ்வீட் பாக்ஸ் பற்றியே இருந்தது. வீட்டு மணி அடிக்கும் சத்தம் கேட்டது.



படம்-நான்கு:-

சைக்கிளையும், பாடப்புத்தகங்களையும் பள்ளியிலே விட்டு விட்டு.. ஆடிக்கொண்டே கிளம்பினாள். வீடு நோக்கி...

$$$

அவ்வளவுதாங்க படம் சுட முடிஞ்சது. சுட்ட படத்துக்கு கதை சொல்லியாச்சு. இன்னிக்கு பறக்குற ஆனை படம் போட்டு இருக்காங்க..அதனால கதியில திருப்பம் எல்லம் இருக்கு! :-)) மத்த படங்களையும் பார்த்துட்டு(சேர்த்துட்டு) கதை தொடர்ச்சியைச் சொல்கிறேன்.

$$$$

முதுமலைக்காடு போக வேண்டுமென்று அடம் பிடித்த இளவரசனை (என் மைந்தன்) பொன்ஸ்பக்கங்கள் வலைப்பூவைப் பார்த்ததும் மகிழ்ந்து போனாள். அந்த எபக்ட் இங்கேயே கிடைத்து விட்ட மகிழ்ச்சி அவனுக்கு! அலைச்சல் குறைந்த மகிழ்ச்சி எனக்கு!!

*** நட்சத்திரம்***

திடீரென்று நேற்று மாலையில் தான் தமிழ்மணத்தில் இருந்து மெயில் வந்தது. நட்சத்திரமாக என்னை தேர்வு செய்திருப்பதாக சொன்னார்கள். ஏற்கனவே தேர்வு செய்திருந்த பதிவரால் இயலாது போனதால் எனக்கு அதிர்ஸ்டம் அடித்திருக்கிறது.

kb கணக்கில் எழுதி வான் வெளில் உலாவ விட்டிருக்கும் பல பதிவர்கள் இருக்க.., எனக்கு இந்த வாய்ப்பு வந்திருப்பது உண்மையில் லகுடபாண்டியின் ஆலோசனை தான் காரணமாக இருக்கும்.

நட்சத்திர வாரத்திற்கான இடுகைகளோடு விரைவில் புரவி ஏறி வருகிறேன்.

தோசை சாப்பிடுவது எப்படி?

தோசை சாப்பிடுவது எப்படி?
...
...
...
...
...
...


...... என்ற பதிவை எழுதுவது எப்படி?


=> google.com போங்கள்.
=> முதலில் தோசை என்று தட்டி, தேடுங்கள்
=> வருகின்ற முதல் சில பக்கங்களைத் திறந்து அவற்றில் உள்ள விஷயங்களை வெட்டி உங்கள் பதிவில் ஒட்டுங்கள்.
=> அதன்பின் மீண்டும் google.com போங்கள்
=> இந்த முறை தோசை என்று தட்டச்சி, படங்களைத் தேடுங்கள்
=> வருகின்ற படங்களைத் தரவிறக்கம் செய்து, அவற்றை உங்கள் பதிவில் சேருங்கள். GITS, MTR போன்ற தோசை படம் போட்ட பெட்டிகளாக இருந்தாலும் பரவாயில்லை.
=> இத்துடன் பதிவை பப்ளிஷ் செய்துவிட்டு ஹோட்டலுக்குப் போய் தோசை வாங்கிச் சாப்பிடுங்கள்.

(பி.கு. தோசை என்று தட்டி, எதுவும் வராவிட்டால், dosai என்றோ, thosai என்றோ தட்டி முதலிலிருந்து செய்யவும். )

என்னைப் போல் இன்னொருத்தன்


என்னடா இவன் சோகமா இருக்கானேன்னு பார்க்குறீங்களா?
பழைய கதைகள் நியாபகத்துக்கு வந்துடுச்சு. அது தான் சோகமா இருக்கேன். சோபா செட்டு எல்லாம் போட்டு இருந்தாளும் நமக்கு அது ஒத்து வருமா.. அதனால தான் தரையில் படுத்து இருக்கேன்.


என்னோட, அம்மாவும் அப்பாவும் காட்டுல ஜாலியாஇருந்தாங்க! எப்பவுமே கூட்டத்தோட இருந்தாலும், அவங்க காதலிச்சது யாருக்கும் தெரியாது. ஆனா, விஷயத்தை அதிக நாட்கள் மறைச்சு வைக்க முடியவில்லை. அதனால.. யாருக்கும் தெரியாம...



கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. கொஞ்ச காலம் ஜாலியா வாழ்ந்து வந்தாங்க!

அவங்களோட மகிழ்ச்சியின் அடையாளமா நான் பொறந்தேன். என்னை மிகுந்த பாசத்துடன் பார்த்துக்கொண்டார்கள். ஆனால் எங்கள் மகிழ்ச்சி அதிக நாள் நீடிக்க வில்லை. ஒரு வேட்டைக்காரன் அப்பாவை கொன்று போட்டு விட்டான். அம்மாவையும் பிடித்துக்கொண்டு போய் விட்டான்.



அப்பாவை இழந்த வருத்தத்தில் இருந்த அம்மா, அவர்களின் பேச்சை கேட்காமல் அதிகமாய் தொல்லை கொடுத்தாள்.



அம்மாவின் அடாவடியால் அவர்கள்,அம்மாவுக்கு பைத்தியம் பிடித்திருப்பகாகச் சொல்லி சங்கிலியால் கட்டிப்போட்டு, சாப்பாடு கூட கொடுக்காமல், பட்டினி போட்டே கொன்று விட்டார்கள்.


இப்போது தனியாளாய் காட்டுக்குள் சுற்றித்திரிகிறேன். என்னைப்போல் இன்னொருவனின் துணையோடு அந்த கயவர்களை அழிக்க!
-----
குறிப்பு:- பொன்ஸ் அவர்கள் சொன்னது போல இன்று உலக சகிப்புத்தன்மை தினமாம். :-)

இட்லி வடை கூட்டணி உடைந்தது

கடந்த சில நாட்களுக்கு முன்னர் டாப் 5 வலைப்பதிவாளர்கள் பற்றி ஒரு பதிவை இட்லிவடையார் வெளியிட்டு இருந்தார். அதில் என்னையும் சேர்த்துக்கொள்ளுவீர்களா என்று மிஸ்டர்.வடையிடம் கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் இதோ.............


////ஆட்டைக்கு என்னையு சேர்த்துக்கொள்ளுங்கள் மிஸ்டர் வடை!// இட்லியை விட்டுவிட்டீர்களே எங்க கூட்டணிக்குள் குழப்பம் வேண்டாம். இருக்கிற குழப்பமே போதும்.
////


என்று பதில் சொல்லி தங்கள் கூட்டணிக்குள் இருந்த குழப்பத்தை வெளியே கொண்டு வந்து விட்டார் மிஸ்டர்.வடை.

இதனால் கோபமடைந்த இட்லியார் தனியே பிரிந்து போர்டு வைத்து, தன்னை மட்டும் பிரபலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.






இனி இட்லிவடை இருவரும் http://idly.blogspot.com, http://vadai.blogspot.com என்று தனித்தனியாக செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொது இடத்தில்..




ஆமாம் மக்களே!!

பொது இடங்களில் சிறுநீர் கழிக்கக் கூடாது என்று ஆணை(பொன்ஸ் கவனிக்க:-யாணை அல்ல) பிறப்பித்த பின் நாட்டின் நிலவரம் அறிய, நகர்வலம் வந்தபோது எடுத்த படம் இது.

:-)))

புலிகேசி டூல் பார்




சிரிக்கவும் சிந்திக்கவும் விரும்புகிறவர்கள்.. படத்தின் மேல் சொடுக்கவும்.

இனி எங்கும் மகிழ்ச்சி

உண்மையாக, நிச்சயமாக, மெய்யாலுமே நான் சொல்லுவது உண்மை.
இனி வலை உலகினரை மகிழ்விப்பது மட்டுமே நோக்கம்.
இது தமிழ்மணத்துக்கான மூன்றாவது பதிவு.

லகுட பாண்டி

வணக்கம் நான் தான் லகுட பாண்டி!
மாமாமாமாமாமாமாமாமாமா மன்னனின் தலைமை அமைச்சன்.
எங்கள் மன்னன் அகிம்சையை விரும்புகிறவர். அதனால் சப்பாத்தியைக் கூட சுடாமல் தன் சாப்பிடுவார்.
:-))))

பராக்.. பராக்.. பான் பராக்..

வந்துவிட்டேன் இருபத்தி நாலாம் புலிகேசி!