சோலியப் பாருங்கடே!

அந்நியன் :ஒரு நாளைக்கு அஞ்சு பின்னூட்டம் போட்டா தப்பா?
மென்பொருள் பொறியாளர் :தப்பு ஒண்ணும் இல்லீங்க!

அந்நியன் :
ஐநூறு பேர் அஞ்சு பின்னூட்டம் போட்டா தப்பா?

மென்பொருள் பொறியாளர் :
தப்பு மாதிரி தாங்க தெரியுது!

அந்நியன் :
ஐநூறு பேர் ஐநூறு பதிவுல அஞ்சு பின்னூட்டம் போட்டா தப்பா?

மென்பொருள் பொறியாளர் :
பெரிய தப்பு தாங்க!

அந்நியன் :

அதெ தாண்டா நீங்க எல்லாம் பண்ணிகிட்டிருக்கீங்க!
வெட்டிப்பசங்களா, போய் சோலியப் பாருங்கடா!!



25 comments:

said...

என்ன நடக்குது இங்கே?
--------

--------

----------?????

said...

யாரங்கே!

லகுடபாண்டி, இந்த மென்பொருள் பொறியாளரைத் தலைகீழாகத் தொங்கவிட்டு ஓணாண்டி தண்டனையைத் தொடங்குங்கள்!

said...

மன்னா... இவர் மட்டுமல்ல ப்ளாக்கும் அத்தனை பேரையும் அப்படி தொங்க விட வேண்டியதிருக்கும். ஆனால் நம்மிடம் இடமில்லையே..!
:(

said...

[img]http://img103.exs.cx/img103/8325/angry2.gif[/img]

said...

ஆகா, வந்துட்டம்ல...!!!!

said...

இம்சையை ரொம்ப நாளாகக் காணுமே ?

புதுவருட மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் !

said...

வாருமய்யா இம்சை அரசா
நல்லாத்தான் கீது
நான் யாரு தெரியுமா? உக்கிர பாண்டியான் டரியல் ஆயிடுவே சாக்கிரதை

said...

வாருமய்யா இம்சை அரசா
நல்லாத்தான் கீது
நான் யாரு தெரியுமா? உக்கிர பாண்டியான் டரியல் ஆயிடுவே சாக்கிரதை

said...

:))

அது சரி!

said...

பெயரில்லாப் பெரியவரே, என்ன நடக்கிறதென்பது எல்லாருக்கும் தெரிந்ததே.. அதுசரி, நீவிர் இங்கு நடப்பது உங்கள் மேலாளருக்குத் தெரியுமா? ;)

said...

லகுடபாண்டி,
இடமில்லையெனில் பக்கத்து மடத்தை வாங்கு.. இல்லையென்றால் LIC மாடியிலிருந்து ஒன்றன்கீழ் ஒன்றாய் எல்லாரையும் தொங்க விட்டுவிடுவோம் வா!

said...

கோபக்கார அனானியே..
பார், நம் மக்கள் செய்யும் அக்கிரமங்களை! பார்த்தபின் உனக்கும் கோபம் வருகிறதா!
உன்னுடைய அதே கோபத்தோடு தான் இந்த இம்சை அரசன் நாட்டைத் திருத்த வந்திருக்கிறான்!

said...

கோபக்கார அனானியே..
பார், நம் மக்கள் செய்யும் அக்கிரமங்களை! பார்த்தபின் உனக்கும் கோபம் வருகிறதா!
உன்னுடைய அதே கோபத்தோடு தான் இந்த இம்சை அரசன் நாட்டைத் திருத்த வந்திருக்கிறான்!

said...

கோபக்கார அனானியே..
பார், நம் மக்கள் செய்யும் அக்கிரமங்களை! பார்த்தபின் உனக்கும் கோபம் வருகிறதா!
உன்னுடைய அதே கோபத்தோடு தான் இந்த இம்சை அரசன் நாட்டைத் திருத்த வந்திருக்கிறான்!

said...

ரவி,
நீங்கள் வாங்கிக் கொடுத்த வேலையைப் பார்க்காமல், இப்படி அநியாயம் செய்து பதிவிடுபவர்களை அடக்க வந்துவிட்டான் அந்நியன்!!!

said...

ஆஹா.. யாரங்கே, அரசனை மறக்காமல் நினைத்திருந்த, இந்தக் கண்ணனுக்குப் பொன்னும் பொருளும் இரண்டு அக்காமாலா, கப்ஸி பாட்டில்களுமாகக் கொடு! கண்ணனுக்கு ஈவதில் அந்தக் கர்ணனை விடவும் பெரியவன் இந்த புலிகேசி என்று "காலம்" பேசட்டும்!

கண்ணன்,
கரடி வேட்டைக்குப் போயிருந்த காரணத்தால் புதுவருடமும் பொங்கலும் கரடி பிரியாணிகளாகப் போய்விட்டது. உங்களுக்கும் எங்கள் அரசு சார்பாக வாழ்த்துக்கள்...

said...

ஐயா கண்மணி,
உக்கிர பாண்டியா? யார் அது? எங்கே அந்த லகுடபாண்டி, கண்மணி உக்கிரபாண்டியைக் கண்டுபிடித்து தீர்த்துக் கட்ட உடனே ஆளனுப்பு!!! (ஆட்டோ அனுப்பினாலும் சரிதான்..)

said...

வாருமைய்யா, நாமக்கல் சிபி!

சுவையான இளம்புறாவாகப் பிடித்து அனுப்பியும் இப்படி நம் கோரிக்கையைப் புறங்கையால் தள்ளிவிட்டுக் காணாமல் போய்விட்டீரே!

இந்த இம்சை அரசன் ஆணையை நீரும் கவனிக்கவில்லை உமது இம்சை அரசனாம் கைப்புள்ளையும் கவனிக்கவில்லை!

அரச குற்றத்தை விசாரிக்க லகுட பாண்டி தலைமையில் விரைவில் ஒரு விசாரணைக் கமிசன் அமைத்துக் கொண்டே இருக்கிறோம். பொருத்திருங்கள் சிபி பிரியாணி சீக்கிரமே தயாராகட்டும்!

said...

இம்சை அரசே!

புறா சுவையாக இருந்ததை நான் இன்னும் மறக்க வில்லை!

மீண்டும் ஏதேனும் நினைவூட்டல் புறா அனுப்புவீர்கள் என்று இருந்தேன்.
ஆனால் அப்படி ஏதும் வரவில்லை!
:((

அந்தப் புறாவின் காலில் கூட ஏதோ ஓலை இருந்ததாகக் கொண்டு வந்து கொடுத்தனர். அதை அப்படியே அரண்மனைக் கூரையில் செருகி வைத்துள்ளேன். என்னவென்று பார்த்துவிட்டு விரைவில் ஆவண செய்கிறேன்.

said...

//அரச குற்றத்தை விசாரிக்க லகுட பாண்டி தலைமையில் விரைவில் ஒரு விசாரணைக் கமிசன் அமைத்துக் கொண்டே இருக்கிறோம்.//

கிடைக்கக் கூடிய கமிசனில் எனக்கும் ஏதாவது பார்த்துப் போட்டுக் கொடுங்கள்!

said...

//பொருத்திருங்கள் சிபி பிரியாணி சீக்கிரமே தயாராகட்டும்!
//

காற்புள்ளி, கமா, ஆச்சரியக் குறி போன்றவை இல்லாமல் எழுதினால் குழப்பம்.

மேற்கண்டவாறு நீங்கள் எழுதியிருப்பதை


பொருத்திருங்கள் சிபி! பிரியாணி சீக்கிரமே தயாராகட்டும்!

என்று எடுத்துக் கொள்ளவேண்டுமா? அல்லது

பொருத்திருங்கள்! சிபி பிரியாணி சீக்கிரமே தயாராகட்டும்!

அதாவது என்னையே பிரியாணி செய்யப் போகிறீர்கள்
என்று எடுத்துக் கொள்வதா?

said...

//அதுசரி, நீவிர் இங்கு நடப்பது உங்கள் மேலாளருக்குத் தெரியுமா? //

:))

said...

பொருத்துப் பாருங்கள்! சிபி பிரியாணி சீக்கிரமே தயாராகட்டும்! என்று தான் சொன்னான் இந்த இம்சை அரசன்.

லகுடபாண்டிக்கு எந்த புள்ளியும் தேவையில்லை!!!
புள்ளி வைக்காமலே கோலம் போட்டுவருவார் எங்கள் லகுடபாண்டி!

said...

அரசே...

சாதிச்சண்டைக்கு தனி மைதானம் தேவையா?

said...

//சாதிச்சண்டைக்கு தனி மைதானம் தேவையா? //
அதான் தமிழ்மணத்திலயே ஒருத்தர் வூடு கட்டி அடிச்சிகிட்டிருக்காரே.. தனி மைதானம் வேறயா!!!